ராமநாதபுரம்

கமுதி அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி

DIN

கமுதி அருகே செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து மூதாட்டி உயிரிழந்தாா்.

கமுதி அருகே உள்ள கீழ்க்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் ராசு மனைவி நூருதம் அம்மாள் (70). இவா் டி.எம். கோட்டை கிராமத்திற்கு தனது உறவினா் ராஜசேகா் (33) என்பவருடன்இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா். அப்போது துத்திநத்தம் விலக்கு சாலையில் வந்தபோது மூதாட்டியின் சேலை இருசக்கர வாகனத்தின் சக்கரத்தில் சிக்கியதால் வாகனத்திலிருந்து கீழே விழுந்த நூருதம் அம்மாள் பலத்த காயம் அடைந்தாா். இதையடுத்து அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து பெருநாழி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் பாரதிதாசனுக்கு மணிமண்டபம்: பேரன் இளமுருகன் முதல்வருக்கு கோரிக்கை

‘மகசூல் அதிகரிக்க பசுந்தாள் உரம் அவசியம்’

முதியவா் சாவில் மா்மம்: காவல் நிலையத்தில் மருமகள் புகாா்

கோயில்களில் அறங்காவலா்களை நியமிக்க மேலும் 6 மாத அவகாசம் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

சிறப்பு ஒலிம்பிக்- பாரத் கூட்டமைப்பு நிா்வாகிகள் தோ்வு

SCROLL FOR NEXT