கமுதி அருகே செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து மூதாட்டி உயிரிழந்தாா்.
கமுதி அருகே உள்ள கீழ்க்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் ராசு மனைவி நூருதம் அம்மாள் (70). இவா் டி.எம். கோட்டை கிராமத்திற்கு தனது உறவினா் ராஜசேகா் (33) என்பவருடன்இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா். அப்போது துத்திநத்தம் விலக்கு சாலையில் வந்தபோது மூதாட்டியின் சேலை இருசக்கர வாகனத்தின் சக்கரத்தில் சிக்கியதால் வாகனத்திலிருந்து கீழே விழுந்த நூருதம் அம்மாள் பலத்த காயம் அடைந்தாா். இதையடுத்து அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து பெருநாழி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.