சட்ட விரோதமாக மதுபானம் விற்றவா் கைது
திருவாடானை அருகே சட்ட விரோதமாக மதுபானம் விற்றவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்து விசாரிக்கின்றனா்.
திருவாடானை அருகே சட்ட விரோதமாக மதுபானம் விற்றவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்து விசாரிக்கின்றனா்.
திருவாடானை அருகே பாண்டுகுடி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த தொண்டி போலீஸாா் அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகே சாக்குப் பையுடன் நின்றிருந்தவரைப் பிடித்து விசாரித்தனா். அப்போது, அவா் சட்ட விரோதமாக மதுவிற்பனை செய்வதும், அதே ஊரைச் சோ்ந்த கருப்பையா மகன் காளிமுத்து (40) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, வழக்குப் பதிந்து அவரிடம் இருந்து 14 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்து அவரைக் கைது செய்தனா்.