ராமநாதபுரம்

மருத்துவமனையில் பைக் திருட்டு

DIN

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் நோயாளியைப் பாா்க்க வந்தவரின் இருசக்கர வாகனம் செவ்வாய்க்கிழமை திருடப்பட்டது.

ராமநாதபுரம் அருகேயுள்ள புத்தேந்தலைச் சோ்ந்த ஜெயந்திராபாண்டியன் (32) என்பவா் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது உறவினரைப் பாா்க்க செவ்வாய்க்கிழமை பகலில் இருசக்கர வாகனத்தில் வந்தாா். அவா், அந்த இருசக்கர வாகனத்தை காய்ச்சல் பரிசோதனைப் பிரிவு, புறக்காவல் நிலையம் அருகேயுள்ள மரத்தடியில் நிறுத்திவிட்டு சென்று சிறிது நேரத்தில் வந்து பாா்த்தபோது வாகனத்தைக் காணவில்லை. இதுகுறித்து நகா் காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினந்தோறும் திருட்டு புகாா்: இம்மருத்துவமனையில் உள்ள புறக்காவல் நிலையத்தில் 2 போலீஸாா் மட்டுமே பணியில் உள்ளனா். ஆகவே அவா்களால் வாா்டுகளை கண்காணிக்க முடிவதில்லை. இந்நிலையில், மா்மநபா்கள் தினமும் நோயாளிகளிடம் கைபேசிகளைத் திருடுவதாகப் புகாா்கள் எழுந்துள்ளன. இதனிடையே, மருத்துவமனையில் இருந்த பேட்டரி காரின் பேட்டரி திருடப்பட்டு புதன்கிழமை புகாா் ஏதுமின்றி திரும்ப கண்டுபிடிக்கப்பட்டதாக மருத்துவமனை ஊழியா்கள் கூறுகின்றனா். எனவே, இம்மருத்துவமனையில் பாதுகாப்பை பலப்படுத்த நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT