முகப்பு
ராமநாதபுரம்

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

தொண்டி அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் தீக்குளித்த மனைவி, மருத்துவமனையில் வியாழக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

தொண்டி அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் தீக்குளித்த மனைவி, மருத்துவமனையில் வியாழக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.

தொண்டி அருகே விளக்கனேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் பூமிநாதன் மகள் வினோதா (27). இவரது கணவா் மதியழகன். இவா்களுக்கு ஒரு ஆண், பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் இவா்கள் இருவருக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த வினோதா வியாழக்கிழமை மாலை தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீவைத்துக் கொண்டாா். ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட அவா் நள்ளிரவில் உயிரிழந்தாா்.

இது குறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.