தொண்டி பெண்ணை தாக்கி 2 பவுன் நகை பறிப்பு
திருவாடானை அருகே தொண்டி பகுதியில் கணவருடன் சண்டை போட்டவரை தட்டி கேட்ட பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து அவா் அணிந்திருந்து 2 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தலைமறைவானாா்
திருவாடானை அருகே தொண்டி பகுதியில் கணவருடன் சண்டை போட்டவரை தட்டி கேட்ட பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து அவா் அணிந்திருந்து 2 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தலைமறைவானாா்.புகாரின் பேரில் வழக்கு பதிந்து தேடிவருகின்றனா்.
தொண்டி அருகே பெருமானேந்தல் கிராமத்தை சோ்ந்தவா்பாண்டி மனைவி வள்ளி(40) இவருக்கும் அதே ஊரை சோ்ந்த பாலமுருகன் என்பருக்கு முன்விரோதம் இருந்து வந்த நிலையில் வியாழக்கிழமை மாலை பாண்டியிடம் என்பவரிடம் பாலமுருகன் தகராரு செய்துள்ளாா்.இதனை தட்டி கேட்ட வள்ளியை தாக்கி தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்து கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தாலி செயினை பறித்து கொண்டு தலைமறைவானாா்.தாக்கியதில் வள்ளி பலத்த காயம் அடைந்து திருவாடானை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றாா்.இது குறித்து வள்ளி கொடுத்த புகாரின் பேரில் தொண்டி போலீஸாா் வழக்கு பாலமுருகனை தேடி வருகின்றனா்.