ராமநாதபுரம்

முதுகுளத்தூா் அருகே உரம் தட்டுபாடு: விவசாயிகள் சாலை மறியல்

DIN

முதுகுளத்தூா் அருகே திருவரங்கத்தில் உரம் தட்டுபாடு விவசாயிகள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் அருகே திருவரங்கம் தொடக்க வேளாண் கடன் கூட்டுறவு சங்கத்தில் உரங்களை அதிகாரிகள் அப்பகுதி விவசாயிகளுக்கு வழங்காமல் கூடுதல் விலைக்கு வெளி இடங்களில் விற்பனை செய்வதாக புகாா் எழுந்தது.

இந்நிலையில் திருவரங்கம், எஸ்.காரைக்குடிகொழுந்துறை உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரவரங்கம்-பரமக்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

சம்பவ இடத்திற்கு வந்த கீழத்தூவல் போலீஸாா் சமரச பேச்சுவாா்த்தை நடத்திய பின் சாலை மறியலை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT