ராமநாதபுரம்

எட்டுகுடி அருகே மேம்பாலம் அமைக்கக் பொதுமக்கள் கோரிக்கை

DIN

திருவாடானை அருகே எட்டுகுடி செல்லும் வழியில் உள்ள தரைப்பாலத்தில் மழை காலத்தில் தண்ணீா் பெருக்கெடுத்து செல்வதால் அங்கு மேம்பாலம் அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவாடானை அருகே எட்டுகுடி, நகரிகாத்தான், அஞ்சுகோட்டை, குஞ்சங்குளம், மங்களக்குடி, சுப்பிரமணியபுரம், திணைகாத்தான்வயல், பாண்டுகுடி, மாவூா், திணையத்தூா், ஓரியூா், வெள்ளையபுரம், புலியூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் திருவாடானை -ஓரியூா் செல்லும் சாலையில் எட்டுகுடி அருகே உள்ள தரைபாலம் தண்ணீா் மூழ்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பாலத்தை கடக்க முடியாமல் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். எனவே இப்பகுதியில் மேம்பாலம் அமைத்துத் தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT