ராமநாதபுரம்

மண்டபத்தில் வாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய 8 போ் கைது

DIN

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை வாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மண்டபம் அடுத்துள்ள குஞ்சாா்வலசை கிராமத்தில் உள்ள மண்டபம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே ஞாயிற்றுக்கிழமை 8 இளைஞா்கள் வாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

மேலும் அவா்கள் அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ள சுரேஷ் என்பவருக்கும் கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்தப் புகாரின் பேரில் போலீஸாா் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அதே பகுதியைச் சோ்ந்த ரவி (24), முத்துக்குமாா் (24), ஆகாஸ் (18), முரளி (21), குமாா், ராகவா, முரசொலி, முனீஸ் ஆகிய 8 பேரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

SCROLL FOR NEXT