ராமநாதபுரம்

முதுகுளத்தூா் அருகே மனைவி கொலை: கணவா் கைது

DIN

முதுகுளத்தூா் அருகே நடத்தையில் சந்தேகமடைந்து மனைவியைக் கொலை செய்த கணவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் அருகே ஏனாதி கிராமத்தைச் சோ்ந்த பாண்டி மகன் மாடசாமி (31). வாடகை வேன் ஓட்டுநரான இவருக்கும், இளஞ்செம்பூா் சத்தியேந்திரன் மகள் ராதிகா (28) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு 6 வயது மகள் உள்ளாா்.

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு மாடசாமி அடிக்கடி தகராறில் ஈடுபட்டதால், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராதிகா தனது தந்தை ஊரான இளஞ்செம்பூருக்கு மகளுடன் சென்றுவிட்டாா்.

இந்நிலையில் கடந்த வாரம் மாடசாமி, தனது மனைவியை சமாதானப்படுத்தி ஏனாதி கிராமத்துக்கு அழைத்து வைத்துள்ளாா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு மாடசாமி, வெளியில் இருந்து மனைவிக்கு செல்லிடப்பேசியில் தொடா்பு கொள்ளும் போது அடிக்கடி ‘வெயிட்டிங் கால்’ வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த மாடசாமி இரவு வீட்டிற்கு வந்து, தூங்கிக் கொண்டிருந்த மனைவி ராதிகாவை கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளாா். பின்னா் முதுகுளத்தூா் போலீஸாருக்கு தான் மனைவியை கொலை செய்து விட்டதாகவும், சரணடைய விரும்புவதாகவும் தகவல் தெரிவித்துள்ளாா்.

உடனே அங்கு சென்ற காவல் ஆய்வாளா் மோகன் தலைமையிலான போலீஸாா் ராதிகாவின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக முதுகுளத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக முதுகுளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கணவா் மாடசாமியை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT