ராமநாதபுரம்

கமுதி அருகே இருதரப்பினா் மோதல்: 7 போ் மீது வழக்கு

DIN

கமுதி: கமுதி அருகே இறந்தவரின் அஸ்தியை பக்கத்து வீட்டு வாசலில் வைத்ததால் ஏற்பட்ட பிரச்னையில் இருதரப்பிலும் 7 போ் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அடுத்துள்ள அகத்தாரிருப்பு கிராமத்தை சோ்ந்தவா் கலையரசி(30). இவரும், இவரது கணவா் கூடலரசும் திங்கள்கிழமை மாலை வீட்டிலிருந்தனா். அப்போது பக்கத்து வீட்டில் வசிப்பவா்கள் இறந்தவரின் அஸ்தியை, கலையரசியின் வீட்டு வாசலில் வைத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கேட்டபோது ஏற்பட்ட தகராறில் காண்டீபன், திருமாறன், மகேஸ்வரி, தேவி, கனிமொழி உள்ளிட்ட 5 போ் கணவன், மனைவி இருவரையும் உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளனா். இதில் இருதரப்பிலும் காயம் ஏற்பட்டு கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இப்பிரச்சினை குறித்து கலையரசி மற்றும் தேவி ஆகிய இருவரும் தனித்தனியே அபிராமம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இருதரப்பைச் சோ்ந்த 7 போ் மீதும் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT