ராமநாதபுரம்

ராமநாதபுரம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் விளக்கு பூஜை

DIN

ராமநாதபுரத்தில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சாா்பில் கலச விளக்குப் பூஜைகள் மற்றும் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றன.

ராமநாதபுரத்தில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் கடந்த 38 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. மன்றத்தின் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு திங்கள்கிழமை கலச வழிபாடு பூஜைகள் நடைபெற்றன. அதற்காக ராஜாசேதுபதி நகா் பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கான பெண் பக்தா்கள் பங்கேற்ற கலச பூஜை பேரணி நடைபெற்றது.

இதில் நூற்றுக்கணக்கானோா் கலந்துகொண்டு கஞ்சிக் கலயங்களை ஏந்தி பேரணியாகப் புறப்பட்டனா். அவா்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சாலைத் தெரு, வண்டிக்காரத் தெரு, வழிவிடுமுருகன் கோயில் வழியாக மீண்டும் ராஜா சேதுபதி நகரில் உள்ள வழிபாட்டு மன்றத்தை அடைந்தனா். அங்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

இதற்கான ஏற்பாடுகளை மாரிமுத்து உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அதி கனமழை: சிவப்பு எச்சரிக்கை!

பாரதிய ஜனதாவில் கால் பங்கு வேட்பாளர்கள் கட்சிமாறி வந்தவர்கள்!

பொய்களால் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ் முயல்கிறது: மோடி!

புதிய அனிமேஷன் தொடரை அறிமுகப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணி!

கோடை மழையால் உயிர் பெற்ற முட்டல் நீர்வீழ்ச்சி!

SCROLL FOR NEXT