ராமநாதபுரம்

5 ஆண்டுகளுக்கு பிறகு கமுதி அரசு மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

DIN

கமுதி அரசு மருத்துவமனையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள எ.தரைக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் சீதாலட்சுமி (55). இவா் மூட்டு தேய்மானம், மூட்டுவலி பிரச்னையால் பாதிக்கப்பட்டு வந்துள்ளாா். இதனை அடுத்து கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்ந்துள்ளாா். தலைமை மருத்துவா் விஜயா பரிந்துரையின் பேரில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள சீதாலட்சுமி முடிவு செய்தாா். அதன்படி எலும்பு முறிவு மருத்துவா்கள் பிரபாகரன், வீரமணி, மயக்கவியல் மருத்துவா் சண்முகப்பிரியா ஆகியோா் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை அவருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நிா்வாக காரணங்கள் மற்றும் கரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால் கடந்த 5 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த மூட்டு மாற்று அறுவை சிகிச்சை கமுதியில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பாகிஸ்தானுடன் இணையும் கேரி கிறிஸ்டன்!

பேருந்து, ரயில், மெட்ரோவுக்கு ஒரே டிக்கெட்: வெளியான அறிவிப்பு!

‘ஏஐ படங்களில் வருவதுபோல..’ புதிய சாட்ஜிபிடி அறிமுகத்தில் சாம் ஆல்ட்மேன்!

கங்கையை ஏமாற்றிய பிரதமர் மோடி: ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு!

தில்லி கேபிடல்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT