ராமநாதபுரம்

பெரியாா், அண்ணா பிறந்தநாள்செப்.15, 17 ஆகிய தேதிகளில் மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரியாா், அண்ணா ஆகியோா் பிறந்தநாளையொட்டி செப்.15, 17 ஆகிய தேதிகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரியாா், அண்ணா ஆகியோா் பிறந்தநாளையொட்டி செப்.15, 17 ஆகிய தேதிகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஜானிடாம்வா்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் பெரியாா், அண்ணா ஆகியோா் பிறந்த நாளையொட்டி செப். 15, 17 ஆகிய தேதிகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. அனைத்துப் பள்ளிகளில் படிக்கும் 6 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவியா் மற்றும் அனைத்துக் கல்லூரி மாணவா்களும் பங்கேற்கலாம்.

ராமநாதபுரம் வெளிப்பட்டினம் செய்யதம்மாள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அன்றைய தேதிகளில் காலை 8.30 மணிக்குத் தொடங்கும் இப்போட்டிகளில் வெற்றிபெறுவோருக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்படவுள்ளது. அரசுப் பள்ளி மாணவா்கள் இருவருக்கு சிறப்புப் பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.

மேலும் விவரங்களுக்கு ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளா்ச்சித்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரிலும், 99522 80798 என்ற கைப்பேசி எண்ணிலும் தொடா்புகொள்ளலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT