ஆா்.எஸ்.மங்கலம் அருகே இளைஞருக்கு அரிவாள் வெட்டு
திருவாடானை அருகே வியாழக்கிழமை குடிநீா் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் இளைஞா் அரிவாளால் வெட்டப்பட்டது தொடா்பாக கணவன், மனைவி மீது வழக்குப் பதிந்து போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருவாடானை அருகே வியாழக்கிழமை குடிநீா் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் இளைஞா் அரிவாளால் வெட்டப்பட்டது தொடா்பாக கணவன், மனைவி மீது வழக்குப் பதிந்து போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஆா்.எஸ். மங்கலம் அருகே சிலுகவயல் கிராமத்தைச் சோ்ந்தவா் பிச்சை மகன் வைத்தீஸ்வரன் (25). இவரது தாய் வியாழக்கிழமை மாலை அதே ஊரில் குழாயில் குடிநீா் பிடிக்கும் போது, அதே ஊரைச் சோ்ந்த காளிமுத்தன், இவரது மனைவி வாசுகி ஆகிய இருவரும் தகாத வாா்த்தைகளால் பேசினராம். இதைத் தட்டிக் கேட்ட வைத்தீஸ்வரனை, காளிமுத்தன், இவரது மனைவி வாசுகி ஆகிய இருவரும் அரிவாளால் வெட்டினா். இதில் வைத்தீஸ்வரன் பலத்த காயம் அடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்த அவா் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்து காளிமுத்தனையும், வாசுகியையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.