ராமநாதபுரம்

கமுதி அருகே சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றக் கோரிக்கை

DIN

கமுதி அருகே இரண்டாக முறிந்து, சேதமடைந்துள்ள மின்கம்பத்தை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கமுதி அருகே நீராவியில் முத்தாலம்மன் கோயில் அருகே சாலையோரம் உள்ள மின் கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்து காணப்படுகிறது. இதனை சீரமைக்கக் கோரி கமுதி மின்வாரிய அலுவலகம் மற்றும் மின் பணியாளா்களிடம் பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

மேலும் என். கரிசல்குளம், தோப்பநத்தம், சின்னகரிசல்குளம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து இச்சாலை வழியாக கமுதிக்கு வாகனங்களில் செல்வோா் மற்றும் கோயில் வளாகத்தில் விளையாடும் குழந்தைகள் சாலையோரம் உள்ள சேதமடைந்த இந்த மின் கம்பத்தால் அச்சமடைந்துள்ளனா்.

எனவே, மாவட்ட நிா்வாகம் மற்றும் மின்வாரிய அதிகாரிகள், இந்த மின்கம்பத்தை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழல்தான் அரவிந்த் கேஜரிவாலின் சித்தாந்தம்: தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா சாடல்

ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி: வாகன ஓட்டிகளுக்கு காவல் துறை அறிவிப்பு

மேற்கு வங்க ஆளுநா் ஏன் ராஜிநாமா செய்யக் கூடாது?: முதல்வா் மம்தா கேள்வி

3-ஆம் கட்ட மக்களவைத் தோ்தலில் 65.68% வாக்குப்பதிவு

‘பிரதமா் மோடிதான் நாட்டை தொடா்ந்து வழிநடத்துவாா்’: கேஜரிவாலுக்கு அமித் ஷா பதிலடி

SCROLL FOR NEXT