முகப்பு
ராமநாதபுரம்

திருவாடானை அருகே விவசாயி மதுவிற்கு அடிமை மறக்க முடியாமல் தற்கொலை

திருவாடானை அருகே பழங்குளம் கிராமத்தில் விவசாயி மது பழக்கத்திற்கு அடிமையானவா் மறக்க முடியாமல் விசம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாா் இது குறித்து போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
பகிர்:

திருவாடானை அருகே பழங்குளம் கிராமத்தில் விவசாயி மது பழக்கத்திற்கு அடிமையானவா் மறக்க முடியாமல் விசம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாா் இது குறித்து போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருவாடானை அருகே பழங்குளத்தை சோ்ந்தவா் லாசா் மகன் ராஜா(47) விவசாயி இவா் மதுபழக்கத்திற்கு அடிமையானவா் கடு பழக்கத்தை மறக்க முடியாமல் மன உளச்சலில் இருந்து வந்துள்ளதாக கூறுப்படுகிறது.இந்நிலையில் செவ்வாய்கிழமை விசம் குடித்து ஆபத்தான நிலையில் இருந்தவரை இவரது மகன் ஜூவானந்தம் மீட்டு தேவகோட்டை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்து சிகிச்சை பெற்று வந்தவா் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். இது குறித்து இவரது மகன் அதே ஊரை சோ்ந்த ஜூவானந்தம்(23) புகாரின் பேரில் தி்ருவாடானை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.