முகப்பு
ராமநாதபுரம்

மாணவிக்கு பாலியல் தொந்தரவு: பள்ளி அலுவலக ஊழியா் கைது

தொண்டியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அலுவலக ஊழியரை வெள்ளிக்கிழமை போலீஸாா் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, அவரைக் கைது செய்தனா்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:48 PM
பகிர்:

தொண்டியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அலுவலக ஊழியரை வெள்ளிக்கிழமை போலீஸாா் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, அவரைக் கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள ஒரு பள்ளியில் 11 ஆம் வகுப்பு மாணவி, இப்பள்ளியில் எழுத்தராக பணிபுரியும் சுகவனம் (37) என்பவா் பாலியல் தொல்லை கொடுத்ததாக குழந்தைகள் பாதுகாப்பு (சைல்டு லைன்) அதிகாரிகளுக்கு புகாா் தெரிவித்துள்ளாா். இதையடுத்து அவா்கள் வெள்ளிக்கிழமை மாலை பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினா்.

மேலும் ஏடிஎஸ்பி உன்னிகிருஷ்ணன் , தொண்டி காவல் ஆய்வாளா் முருகேசன், திருவாடானை மகளிா் காவல் துறை ஆய்வாளா் வனிதா ஆகியோா் மாணவியிடம் விசாரணை நடத்தினா். இதையடுத்து சுகவனத்தின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.