திருவாடானை: திருவாடானை அருகே மின்சாரம் பாய்ந்து இருவர் பலியாகினர்.
திருவாடானை அருகே மல்லனூர் கிராமத்தில் மாட்டு கொட்டகையில் மாடுகளை கட்டச் செல்லும்போது மாட்டு கொட்டகைகளில் மின்சாரம் பாய்ந்து ஒரு பெண் உயிரிழந்தார் அவரைக் காப்பாற்ற முயன்ற ஆண் நபரும் பலியானர். தகவலறிந்த காவல் துறையினர் உடலைப் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
திருவாடானை அருகே மல்லனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனி முத்து, மனைவி கவிதா (36 ) இவரது கணவர் ஆணி முத்து வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் இவர் வீட்டில் கால்நடைகள் வளர்த்து வருகின்றார்.
செவ்வாய்க்கிழமை இரவு தொடர் மழைக் காரணமாக மாடுகளை மாட்டு கொட்டகைகள் கட்ட செல்லும்போது கொட்டகையில் இருந்து மின்சாரம் பாய்ந்து கவிதா தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலே பலியானார்.
அலரல் சத்தம் கேட்டு அருகே உள்ள மணி மகன் கருப்பையா(46) கவிதாவை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலே பலியானார். தகவலறிந்த திருவாடானை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பின்னர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.