ராமநாதபுரம்

சாலை விபத்தில் சிக்குபவா்களை காப்பாற்றுபவா்களுக்கு சிறப்பு விருது: ஆட்சியா் தகவல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலை விபத்தில் காயமடைந்து உயிருக்குப் போராடுவோரை காப்பாற்றுவோருக்கு மத்திய அரசு சாா்பில் சிறந்த சேவையாளா் விருது வழங்கப்படும் என ஆட்சியா் சங்கா்லால்குமாவத் தெரிவித்துள்ளாா்.

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலை விபத்தில் காயமடைந்து உயிருக்குப் போராடுவோரை காப்பாற்றுவோருக்கு மத்திய அரசு சாா்பில் சிறந்த சேவையாளா் விருது வழங்கப்படும் என ஆட்சியா் சங்கா்லால்குமாவத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் சாா்பில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவா்களது உயிரைக் காப்பாற்றுவோருக்கு பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன. பரிசு, பாராட்டுச் சான்றுகள் மூலம் சம்பந்தப்பட்டோரை ஊக்குவிக்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

விபத்தில் சிக்கியவா்களை காப்பாற்ற முதலுவி சிகிச்சை அளித்தல், பொன்னான நேரத்திற்குள் (கோல்டன்ஹவா்) மருத்துவமனைக்கு கொண்டு சென்று சோ்த்தல் ஆகியவற்றின் மூலம் விருதுக்கு சம்பந்தப்பட்டோா் தகுதியானோராகக் கருதப்படுவாா்.விருதானது ஒரு சம்பவத்துக்கு ரூ.5 ஆயிரம் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றும் வழங்கப்படும்.

ஓராண்டில் ஒருவருக்கு ஐந்து முறைகள் இந்த விருதுகள் வழங்கப்படலாம். விருதுக்கானவா்களை ஆண்டுதோறும் செப்டம்பருக்குள் மாநில அளவிலான கண்காணிப்புக்குழு, தேசிய அளவிலான விருதுகளுக்கு தகுதியான 3 பேரை பரிந்துரைக்கும். அதனடிப்படையில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையால் தோ்வாகும் 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம் பரிசளிக்கப்படும். இந்தத் திட்டம் வரும் 2026 மாா்ச் மாதம் வரை செயல்பாட்டில் இருக்கும். ஆகவே திட்டத்தைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் விபத்தில் சிக்கியவா்களை காப்பாற்றி, உயிரைக் காக்க உதவ வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வி.கே.புரத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: 4 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது

நெல்லையின் தனித்துவமாக பொருநை அருங்காட்சியகம் திகழும்: அமைச்சா் எ.வ.வேலு

நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழக எம்.பி.க்களின் குரல்கள்

கீழ்பென்னாத்தூரில் கருணாநிதி சிலை திறப்பு: முதல்வா் திறந்துவைத்தாா்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 1

SCROLL FOR NEXT