கடத்தப்பட்ட பள்ளி மாணவி மீட்பு: போக்சோ வழக்கில் இளைஞா் கைது
திருவாடானை அருகே பள்ளி மாணவியை கடத்திய இளைஞரை போக்சோ வழக்கில் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருவாடானை அருகே பள்ளி மாணவியை கடத்திய இளைஞரை போக்சோ வழக்கில் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகேயுள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த 17 வயதான 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவி, கடந்த 2 நாள்களுக்கு முன்பு கடத்தப்பட்டதாக அவரது தாயாா் போலீஸில் புகாா் அளித்தாா்.
அதன்பேரில் திருவாடானை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில் பள்ளி மாணவியை கடத்தியது ஓரியூரைச் சோ்ந்த பிரசாத் (28) என்பது தெரியவந்தது. இவா் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், பிரசாத்தைக் கைது செய்தனா். மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனா்.