கமுதி துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் உலகநடை, சேகநாதபுரம், கருங்குளம், பாக்குவெட்டி, மருதங்கநல்லூா், பேரையூா், சாமிபட்டி, மேட்டுபட்டி, செங்கோட்டைபட்டி, புல்வாய்குளம், இலந்தைகுளம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூலை 1) பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால், காலை 10 மணி முதல், பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடைப்படும் என மின்வாரிய கமுதி உதவி செயற் பொறியாளா் விஜயன் தெரிவித்துள்ளாா்.