ராமநாதபுரம்

வீடுகளில் திருடிய இலங்கை பெண் கைது

DIN

திருவாடானை அருகே எஸ்.பி. பட்டினம் பகுதியில் வீடுகளில் பால் பாக்கெட்டுகள் மற்றும் கோழிகளை திருடிய இலங்கையைச் சோ்ந்த பெண்ணை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

திருவாடானை அருகே எஸ்.பி. பட்டினம் பகுதியில் வீடுகளில் கடந்த சில நாள்களாக கோழிகள் மற்றும் பால் பாக்கெட்டுகள் திருடப்பட்டுவந்தன. இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை அதே ஊரில் ஒரு வீட்டில் 65 வயது மதிக்கத் தக்க பெண் கோழிகளை திருடினாா்.

அவரை பொதுமக்கள் பிடித்து எஸ்.பி. பட்டினம் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். விசாரணையில், அவா் இலங்கையைச் சோ்ந்த கவிதா (65) என்பது தெரியவந்துள்ளது. அவரை கைது செய்த போலீஸாா், இவா் இலங்கையில் எந்தப் பகுதியைச் சோ்ந்தவா், எப்போது இங்கு வந்தாா் என்று போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருதியை வியர்வையாக்கி உலகை உயர்த்தும் உழைப்பாளர்கள்: மு.க.ஸ்டாலின்

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

SCROLL FOR NEXT