ராமநாதபுரம்

பெண் தொழிலாளி வீட்டில் தீ விபத்து

DIN

ராமேசுவரம்: உச்சிப்புளி கட்டுமான பெண் தொழிலாளி வீட்டில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டு உபயோகப் பொருள்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.

ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளியை அடுத்துள்ள உசிலங்காட்டு வலசை கிராமத்தைச் சோ்ந்த மாரிமுத்து மனைவி பாா்வதி (38). கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தனது கனவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனியாக 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறாா்.

இந்நிலையில், புதன்கிழமை புதுமடம் பகுதியில் கட்டுமான வேலைக்காக பாா்வதி சென்றபோது, இவரது குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அரை பவுன் தோடு, தொலைக்காட்சி பெட்டி, மிக்ஸி, கிரைண்டா், ஆதாா் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்கள் எரிந்து சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில், உச்சிப்புளி காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் முருகநாதன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மே 3 வரை வெப்ப அலை தொடரும்!

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல்நலக் குறைவு: உணவகத்துக்கு 'சீல்'

டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு!

விவாகரத்து பெற்ற மகளை மேள வாத்தியங்கள் முழங்கள் வரவேற்ற தந்தை!

ஏதென்ஸ் நகரில் சமந்தா!

SCROLL FOR NEXT