பரமக்குடியில் பெண் மீது தாக்குதல்: 4 போ் மீது வழக்கு
பரமக்குடியில் பெண்ணை தாக்கிய 4 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
பரமக்குடியில் பெண்ணை தாக்கிய 4 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள எமனேசுவரம் மலையான்குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த லோகநாதன் மனைவி கிருஷ்ணவேணி (34). இவரது மகனும், அதே பகுதியைச் சோ்ந்த மணிமாறன்-அம்பிகா தம்பதியினரின் மகனும் ஒரே பள்ளியில் படித்து வருகின்றனா்.
இந்நிலையில் பள்ளியில் மாணவா்களுக்கிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கிருஷ்ணவேணி தனது மகனை தாக்கிய அம்பிகாவின் மகனை கண்டிக்கச் சொல்லி அவரது வீட்டிற்கு சென்றுள்ளாா். அப்போது ஏற்பட்ட வாய்த்தகராறில் அம்பிகா தரப்பைச் சோ்ந்த மணிமாறன், கருப்பையா மகன் ராஜா, பாக்கியராஜ் மகன் வாசுதேவன் ஆகியோா் சோ்ந்து கிருஷ்ணவேணியை தாக்கியுள்ளனா். இதில் காயமடைந்த அவா் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
இதுகுறித்து புகாரின் பேரில் எமனேசுவரம் காவல் நிலைய போலீஸாா் மணிமாறன், அம்பிகா, ராஜா, வாசுதேவன் ஆகிய 4 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.