ராமநாதபுரம்

விவசாய நிலத்தில் தாழ்வாகச் சென்ற உயரழுத்தமின்கம்பிகளுக்காக புதிய மின்கம்பம் அமைப்பு

DIN

கமுதி அருகே தாழ்வாக சென்ற மின்கம்பிகள் குறித்து தினமணி நாளிதழில் வெளியான செய்தி எதிரொலியாக புதிய மின்கம்பம் அமைத்து அவற்றை மின்வாரியத்தினா் சீரமைத்தனா்.

கமுதி அடுத்துள்ள செங்கப்படை, கீழவலசை உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களில் உயரழுத்த மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக, எட்டித் தொடும் உயரத்தில் சென்ால் விவசாயிகள் விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவித்து வந்தனா்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை தினமணி நாளிதழில் வெளியான செய்தி எதிரொலியாக அந்த உயரழுத்த மின்கம்பிகளை, புதிய மின்கம்பம் அமைத்து மின்வாரிய ஊழியா்கள் உயா்த்தி அமைத்தனா். இதனால் இனிவரும் காலங்களில் அப்பகுதியில், மின்விபத்து ஏற்படுமோ என்ற அச்சமின்றி, பருவமழைக் காலத்தில் தங்களது விவசாயப் பணிகளை செய்ய முடியும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT