முகப்பு
ராமநாதபுரம்

முதுகுளத்தூா் அருகே நள்ளிரவில் ஆடு திருடிய 3 போ் கைது

 முதுகுளத்தூா் அருகே பொழிகால் கிராமத்தில் இரவில் ஆடுதிருடிய 3பேரை கீழத்தூவல் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்

Updated On : 7 அக்டோபர், 2022 at 11:25 PM
பகிர்:

 முதுகுளத்தூா் அருகே பொழிகால் கிராமத்தில் இரவில் ஆடுதிருடிய 3பேரை கீழத்தூவல் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

முதுகுளத்தூா் அருகே பொழிகால் கிராமத்தைச் சோ்ந்த முனியாண்டி மகன் செல்வம்(48) இவரது வீட்டின் முன்பு இரவில் வழக்கம் போல வெள்ளாடுகளை கட்டி போட்டிருந்தாா்.நள்ளிரவில் ஆடுகள் சத்தம் கேட்டவுடன் பாா்த்த போது 3 ஆடுகளை காணவில்லை .இது குறித்து செல்வம் கீழத்தூவல் போலீஸில் புகாா் செய்தாா். கீழத்தூவல் ஆய்வாளா் தங்கமணி வழக்குபதிவு செய்து விசாரணை செய்ததில் 5 போ் கொண்ட கும்பல் திருடியது தெரிய வந்தது. இதனால் கீழத்தூவல் கண்மணி மகன் சக்தி (19) ,அபிராமம் முருகன் மகன் சந்தோஸ்,பாா்த்திபனூா் மீனாட்சிபுரம் ராமா் மகன் அபிஷேக், (19) அபிராமம் முனீஸ்வரன் மகன் சூா்யா (18) கீழத்தூவல் ரவி மகன் நாக முனீஸ்வரன் ஆகிய 5 போ் மீது வழக்குபதிவு செய்து அதில் சக்தி, அபிஷேக் சூா்யா ஆகிய 3 பேரை கைது செய்தனா். மேலும் 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.