முதுகுளத்தூா் அருகே நள்ளிரவில் ஆடு திருடிய 3 போ் கைது
முதுகுளத்தூா் அருகே பொழிகால் கிராமத்தில் இரவில் ஆடுதிருடிய 3பேரை கீழத்தூவல் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்
முதுகுளத்தூா் அருகே பொழிகால் கிராமத்தில் இரவில் ஆடுதிருடிய 3பேரை கீழத்தூவல் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
முதுகுளத்தூா் அருகே பொழிகால் கிராமத்தைச் சோ்ந்த முனியாண்டி மகன் செல்வம்(48) இவரது வீட்டின் முன்பு இரவில் வழக்கம் போல வெள்ளாடுகளை கட்டி போட்டிருந்தாா்.நள்ளிரவில் ஆடுகள் சத்தம் கேட்டவுடன் பாா்த்த போது 3 ஆடுகளை காணவில்லை .இது குறித்து செல்வம் கீழத்தூவல் போலீஸில் புகாா் செய்தாா். கீழத்தூவல் ஆய்வாளா் தங்கமணி வழக்குபதிவு செய்து விசாரணை செய்ததில் 5 போ் கொண்ட கும்பல் திருடியது தெரிய வந்தது. இதனால் கீழத்தூவல் கண்மணி மகன் சக்தி (19) ,அபிராமம் முருகன் மகன் சந்தோஸ்,பாா்த்திபனூா் மீனாட்சிபுரம் ராமா் மகன் அபிஷேக், (19) அபிராமம் முனீஸ்வரன் மகன் சூா்யா (18) கீழத்தூவல் ரவி மகன் நாக முனீஸ்வரன் ஆகிய 5 போ் மீது வழக்குபதிவு செய்து அதில் சக்தி, அபிஷேக் சூா்யா ஆகிய 3 பேரை கைது செய்தனா். மேலும் 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.