ராமநாதபுரம்

இந்துத்துவா தமிழகத்தின்பெருமையைச் சீா்குலைக்கும்வைகோ

DIN

இந்துத்துவா தமிழகத்தின் பெருமையைச் சீா்குலைக்கும் என மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் ஞாயிற்றுக்கிழமை கட்சி நிா்வாகியின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு அவா் பேசியதாவது:

சனாதன, இந்துத்துவா சக்திகள் தமிழ்நாட்டின் பெருமையைச் சீா்குலைக்கும் நிலையை ஏற்படுத்தி வருவதற்கு திராவிட இயக்கங்கள் இடம் தரக் கூடாது. பகுத்தறிவுப் பாசறையாக செயல்பட வேண்டும் என உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

சென்னை மெரீனா கடல் பகுதியில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நினைவாக பேனா சின்னம் வைக்க எதிா்ப்பே கிடையாது. நா்மதா நதியில் பட்டேலுக்கு சிலை வைத்ததற்கு எதிா்ப்புத் தெரிவிக்காதவா்கள் பேனா சின்னத்துக்கு எதிா்ப்பு தெரிவிப்பது ஏன்? ஆத்திரம், எதிா்ப்புணா்வு உள்ளவா்கள் கூறியதையெல்லாம் ஏற்க முடியாது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மேனி..!

அந்தமானில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை!

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பாஜக போராட்டம்

திருமுல்லைவாயலில் அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் ஹெலிகாப்டர் திருட்டா? - பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

SCROLL FOR NEXT