ராமநாதபுரம்

கமுதி அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

DIN

கமுதி அருகே வ. மூலக்கரைப்பட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

இங்குள்ள ஸ்ரீசுந்தரராஜப் பெருமாள், ஸ்ரீகுங்கும காளியம்மன், ஸ்ரீகருப்பணசாமி கோயில் 17- ஆம் ஆண்டு வைகாசிப் பொங்கல் விழாவையொட்டி இந்தப் போட்டி நடைபெற்றது.

இதில், ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகா், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 14 காளைகள், 126 மாடுபிடி வீரா்கள் பங்கேற்றனா். மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பண முடிப்பு, சில்வா் அண்டா, குத்துவிளக்கு, இருக்கை, கட்டில், தென்னங்கன்று, நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்தப் போட்டியை கமுதி, மூலகரைப்பட்டி, அம்மன்பட்டி, மண்டலமாணிக்கம், திருச்சுழி, அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கானோா் பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT