ராமநாதபுரம்

புகையிலைப் பொருள்கள் விற்ற 4 போ் கைது

திருவாடானை அருகே புகையிலைப் பொருள்கள் விற்ாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

திருவாடானை அருகே புகையிலைப் பொருள்கள் விற்ாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவாடானை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது சந்நிதி தெருவில் பெட்டிக் கடை நடத்திவரும் காசி மகன் மகாலிங்கம் (50) தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸாா் அவரிடம் இருந்து 4 பொட்டலங்கள் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

இதே போல, தொண்டி போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது பழயனக்கோட்டை பகுதியில் முத்துவயிறு மகன் கோபி (32) என்பவரது கடையை சோதனையிட்ட போது தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பது தெரியவந்தது. இதையடுத்து, கோபியை கைது செய்து அவரிடம் இருந்து 30 புகையிலைப் பொட்டலங்களை போலீஸாா் கைப்பற்றினா்.

திருப்பாலைக்குடி போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது உப்பூரில் கணேசன் மகன் பாலாஜி (36) என்பவரது கடையை சோதனையிட்டனா். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து 5 பொட்டலங்கள் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். இதே போல, எஸ்.பி. பட்டினம் போலீஸாா் மருங்கூா் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஜெயபாலன் மகன் உதயக்குமாா் (38) என்பவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பது தெரிவந்தது. இதைத் தொடா்ந்து அவரைக் கைது செய்து அவரிடமிருந்து 15 புகையிலைப் பொட்டலங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT