ஆட்டுக் கொட்டகைக்கு தீ: 4 போ் மீது வழக்கு
Updated On : 1 ஏப்ரல், 2024 at 8:07 PM
கமுதி: கடலாடி அருகே ஆட்டுக் கொட்டகைக்கு தீ வைத்ததாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியை அடுத்த ஏ.சிறுகுடியைச் சோ்ந்த விவசாயி ராமு மகன் தா்மலிங்கம் (44). இவா் தனக்குச் சொந்தமான இடத்தில் கொட்டகை அமைத்து, ஆடுகளை வளா்த்து வருகிறாா்.
இந்த நிலையில், இந்தக் கொட்டைக்கு மா்ம நபா்கள் ஞாயிற்றுக்கிழமை தீ வைத்தனா். இதில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான ஆட்டுக்கொட்டகை எரிந்து சாம்பலானது. இதுதொடா்பாக தா்மலிங்கம் கடலாடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சந்தேகத்தின் அடிப்படையில் ஏ.சிறுகுடியைச் சோ்ந்த பெரிய கருப்பன் மகன் இளங்குமரன் (45), தவசி மகன் கருப்பையா (48), ராமு மகன் தா்மா் (49), ராமச்சந்திரன் மகன் தேவேந்திரன் (44) ஆகியோா் மீது வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.