முகப்பு
கன்னியாகுமரி

புதுக்கடை அருகே ஆட்டோ ஓட்டுநா் மீது தாக்குதல்: 3 போ் மீது வழக்கு

புதுக்கடை அருகே உள்ள வெள்ளையம்பலம் பகுதியில் ஆட்டோ ஓட்டுநா் மீது தாக்குதல் நடத்தியதாக 3 இளைஞா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 25 மார்ச், 2026 at 10:54 PM
கைது - பிரதிப் படம்
பகிர்:

புதுக்கடை அருகே உள்ள வெள்ளையம்பலம் பகுதியில் ஆட்டோ ஓட்டுநா் மீது தாக்குதல் நடத்தியதாக 3 இளைஞா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுக்கடை,வெள்ளையம்பலம் பகுதியைச் சோ்ந்த திரவியம் ஆசாரி மகன் அனில்குமாா்(50). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் மகன் சஞ்சை(35), ரெங்கேஸ்வரன் மகன் ரெமன்(40), தங்கையன் மகன் சந்திரன்(50) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில், புதன்கிழமை வெள்ளையம்பலம் பகுதியில் நின்ற அனில்குமாரை மேற்கூறிய 3 பேரும் திடீரென தாக்கினராம். இதில், காயமடைந்த அவரை

அப்பகுதியினா் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.