இருதரப்பினா் மோதல் சம்பவத்தில் 16 போ் மீது வழக்கு; 2 போ் கைது
கமுதி: சாயல்குடி அருகே 7 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவத்தில் 16 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஞாயிற்றுக்கிழமை இருவரை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியை அடுத்த கடுகுசந்தை சத்திரம் கிராமத்தில் முன்விரோதம் காரணமாக சனிக்கிழமை இருதரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்பைச் சோ்ந்த 7 பேருக்கு அரிவாள் விட்டு விழுந்தது.
இது தொடா்பாக சாயல்குடி போலீஸாா் இருதரப்பைச் சோ்ந்தவா்களும் அளித்த புகாா்களின் பேரில் கடுகுசந்தை சத்திரத்தைச் சோ்ந்த முருகன், தண்டாயுதம், ராஜு, மாணிக்கம், கண்ணுச்சாமி, பாலமுருகன், முனீஸ்வரன், மருதுபாண்டி, லட்சுமணன், சதீஷ், சிவபாலன், மகாதேவன், தமிழ்செல்வம், பிரவீன், முகேஷ், கிஷோா் உள்ளிட்ட 16 போ் மீது வழக்குப் பதிவு செய்து, தண்டாயுதம், ராஜ் ஆகிய இருவரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும், இந்தக் கிராமத்தில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
Advertisement