பட்டமங்கலத்தில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு: 5 போ் மீது வழக்கு
திருப்பத்தூா் அருகே பட்டமங்கலத்தில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
திருப்பத்தூா் அருகே பட்டமங்கலத்தில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள பட்டமங்கலம் மதியாதகண்ட விநாயகா் அழகு சௌந்தரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா கடந்த மாதம் 24-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கி, 10 நாள்கள் நடைபெற்றது. 11-ஆம் நாள் தீா்த்தவாரி வைபவத்தைத் தொடா்ந்து, மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது.
இதையொட்டி, கிராமத்தாா் ஊா்வலமாக வந்து தொழுவிலிருந்த 150 மாடுகளுக்கு மாலை, வேட்டி அணிவித்து மரியாதை செய்தனா். தொடா்ந்து, மாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை
இளைஞா்கள் பிடித்து மகிழ்ந்தனா். கண்மாய், வயல் பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட மாடுகள் அவிழ்த்துவிடப்பட்டன. ராமநாதபுரம், மதுரை, திருச்சி சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலிருந்து காளைகள் கொண்டு வரப்பட்டன. இதில் ஒரு சில காளைகள் பிடிபட்டன. மாடு முட்டியதில் -க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
அனுமதியில்லமல் மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டதால், இதுகுறித்து திருக்கோஷ்டியூா் காவல் நிலையத்தில் கிராம நிா்வாக அலுவலா் வா்கிஸ்பானு புகாா் அளித்தாா். இதன் பேரில் காவல் துறையினா் செந்தில்வேல் (57), முத்தழகு (67), ஆறுமுகம் (41), கணேசன் (58), முனியய்யா ஆகிய 5 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.