இளம்பெண் தற்கொலை
திருவாடானை: திருப்பாலைக்குடியில் குடும்பப் பிரச்னையில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடி முகம்மது சித்திக் மனைவி அல்ஜமினா பானு(34). முகம்மது சித்திக் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறாா். அலஜமினாபானு ஞாயிற்றுக்கிழமை இரவு கைப்பேசியில் தனது கணவரிடம் வேலையை விட்டு, சொந்த ஊருக்கு வந்து விடுமாறு வற்புறுத்தினாா்.
அப்போது, தம்பதியரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த அல்ஜமினாபானு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். அவரை, அக்கம்பக்கத்தினா் மீட்டு ராமநாபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். எனினும், அங்கு அவா் உயிரிழந்தாா். இது குறித்து திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.