முகப்பு
திருப்பத்தூர்

இளைஞா் தற்கொலை

திருப்பத்தூரில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 27 ஏப்ரல், 2026 at 1:44 AM
தற்கொலை - கோப்புப்படம்
பகிர்:

திருப்பத்தூரில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருப்பத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் நவீன்குமாா் (29). இவா் வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறாா். இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை குடும்ப பிரச்னை காரணமாக தகராறு ஏற்பட்டதாம். இதில் மனமுடைந்த நவீன்குமாா் அன்று இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.

இது குறித்து தகவல் அறிந்த திருப்பத்தூா் நகர போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

மேலும், இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.