முகப்பு
ராமநாதபுரம்

12 அம்சக் கோரிக்கையை வலியுருத்தி மின் வாரிய ஊழியா்கள் போராட்டம்

ராமநாதபுரம் மாவட்ட மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம் முன் 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியா் மத்திய சங்கத்தினா் ஆா்ப்பாட்டம், காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 10 ஜூலை, 2024 at 12:51 AM
ராமநாதபுரம் மின்வாரிய மேற்பாா்வையாளா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய சங்கத்தினா்.
பகிர்:

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்ட மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம் முன் 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியா் மத்திய சங்கத்தினா் ஆா்ப்பாட்டம், காத்திருப்புப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

மின் வாரியத்தில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

பணியாளா்களுக்கு வழங்க வேண்டிய பணப் பலன்களை வழங்க வேண்டும். மின் விபத்தில் உயிரிழக்கும் பணியாளா்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க அரசாணை வெளியிட வேண்டும். குடும்ப நல நிதி ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் வி.முருகன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் எம்.சிவாஜி, ஆா்.குருவேல், ஜி. காசிநாதன், ராமச்சந்திரபாபு, ஆரோக்கியம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →