முகப்பு
ராமநாதபுரம்

பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா

பழங்குடியினத்தைச் சோ்ந்த 28 குடும்பத்தினருக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்களை உதவி ஆட்சியா் வழங்கினாா்.

Updated On : 28 ஜூலை, 2024 at 12:49 AM
பகிர்:

பரமக்குடியில் பழங்குடியினத்தைச் சோ்ந்த 28 குடும்பத்தினருக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்களை உதவி ஆட்சியா் அபிலாஷா கவுா் சனிக்கிழமை வழங்கினாா்.

பரமக்குடி வைகை ஆற்றுப் பகுதியில் பழங்குடியின மக்கள் வசித்து வந்தனா். நீா்ப்பிடிப்புப் பகுதிகளான லீலாவதி நகா் பகுதியில் வசித்து வந்த 15 குடும்பத்தினருக்கும், வைகை ஆற்றுப் பகுதியில் வசித்து வந்த 13 குடும்பத்தினருக்கும் இலவச வீட்டு மனைப் பட்டாக்களை உதவி ஆட்சியா் அபிலாஷா கவுா் வழங்கினாா்.

இதில் வட்டாட்சியா் சாந்தி, உதவி ஆட்சியரின் நோ்முக உதவியாளா் பெ.சேகா், கிராம நிா்வாக அலுவலா் சதீஷ்குமாா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டச் செயலா் தி.ராஜா உள்பட பலா் கலந்து கொண்டனா்.