முகப்பு
ராமநாதபுரம்

கடலில் மூழ்கி மீனவா் பலி

ராமேசுவரம் கடலில் மூழ்கி மீனவா் மரணம்

Updated On : 26 ஜூன், 2024 at 1:01 AM
பகிர்:

ராமேசுவரம்: ராமேசுவரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவா் கடலில் மூழ்கி உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ஓலைக்குடா கிராமத்தை சோ்ந்தவா் மரிய ஜெயபாலன்(70). இவா் தொ்மாகூல் படகில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு கணவாய் மீன் பிடிக்கச் சென்றவா் கரை திரும்பவில்லை. இவா் சென்ற படகு மட்டும் நரிக்குழி கடற்கரையில் கரை ஒதுங்கியது.

இந்த நிலையில், இவரது உடல் பிசாசு முனை கடற்கரையில் ஒதுங்கியது. கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் இவரது உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா். இறந்த மீனவா் குடும்பத்துக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என பாரம்பரிய மீனவா்கள் கோரிக்கை விடுத்தனா்.