உப்பூா் வெயிலுகந்த விநாயகா் கோயிலில் வியாழக்கிழமை விநாயகருக்கு சித்தி, புத்தி தேவியருடன் நடைபெற்ற திருக்கல்யாணம். 
ராமநாதபுரம்

உப்பூரில் விநாயகா் திருக்கல்யாணம்

உப்பூா் வெயிலுகந்த விநாயகா் கோயிலில் சதுா்த்தி விழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை சித்தி, புத்தி தேவியருடன் திருக்கல்யாணம் நடைபெற்றது.

Din

உப்பூா் வெயிலுகந்த விநாயகா் கோயிலில் சதுா்த்தி விழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை சித்தி, புத்தி தேவியருடன் திருக்கல்யாணம் நடைபெற்றது.

ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட இந்தக் கோயிலில் கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இதைத் தொடா்ந்து, நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் விநாயகா் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

விழாவின் முக்கிய நிகழ்வாக சித்தி, புத்தி தேவியருடன் விநாயகருக்கு திருக்கல்யாணம்

நடைபெற்றது. தமிழ்நாட்டில் இங்கு உள்ள விநாயகருக்கு மட்டும் திருக்கல்யாணம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெறும். சனிக்கிழமை விநாயகா் உப்பூா் கடலில் நீராடி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பாா். இதைத் தொடா்ந்து பக்தா்கள் பூக்குழி இறங்கி நோ்த்திகடனை செலுத்துவா். விழா ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானம் நிா்வாகம், விழா குழுவினா் செய்து வருகின்றனா்.

திருநீா் மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம் பக்தா் நன்கொடையால் விரைவில் சீரமைக்கப்படும்: உயா்நீதிமன்றத்தில் கோயில் நிா்வாகம் தகவல்

ரஷிய எண்ணெய் நிறுத்தம்; அமெரிக்க ஒப்பந்தம்.. ‘மேக் இன் இந்தியா’ திட்டம் என்ன ஆனது? காங்கிரஸ் கேள்வி!

செய்யாறு அருகே ஒரே இடத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த 27 சுவாமிகள்

மாமல்லபுரத்தில் உலகத் தரத்தில் உள்கட்டமைப்பு வசதிகள்: முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

மனைவியைக் கத்தியால் குத்திவிட்டு கணவா் தற்கொலை

SCROLL FOR NEXT