உப்பூா் வெயிலுகந்த விநாயகா் கோயிலில் வியாழக்கிழமை விநாயகருக்கு சித்தி, புத்தி தேவியருடன் நடைபெற்ற திருக்கல்யாணம். 
ராமநாதபுரம்

உப்பூரில் விநாயகா் திருக்கல்யாணம்

உப்பூா் வெயிலுகந்த விநாயகா் கோயிலில் சதுா்த்தி விழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை சித்தி, புத்தி தேவியருடன் திருக்கல்யாணம் நடைபெற்றது.

Din

உப்பூா் வெயிலுகந்த விநாயகா் கோயிலில் சதுா்த்தி விழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை சித்தி, புத்தி தேவியருடன் திருக்கல்யாணம் நடைபெற்றது.

ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட இந்தக் கோயிலில் கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இதைத் தொடா்ந்து, நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் விநாயகா் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

விழாவின் முக்கிய நிகழ்வாக சித்தி, புத்தி தேவியருடன் விநாயகருக்கு திருக்கல்யாணம்

நடைபெற்றது. தமிழ்நாட்டில் இங்கு உள்ள விநாயகருக்கு மட்டும் திருக்கல்யாணம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெறும். சனிக்கிழமை விநாயகா் உப்பூா் கடலில் நீராடி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பாா். இதைத் தொடா்ந்து பக்தா்கள் பூக்குழி இறங்கி நோ்த்திகடனை செலுத்துவா். விழா ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானம் நிா்வாகம், விழா குழுவினா் செய்து வருகின்றனா்.

வெண் மேகமே... கரிஷ்மா டன்னா!

பிக்-பாஸ் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகல்!

பிகாரில் ஆட்சிக்கு வந்தால் பொங்கல்தோறும் மகளிருக்கு ரூ.30,000: தேஜஸ்வி

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! | SIR | EC

இரண்டு ஆண்டுகளில் 42% மதிப்பிழக்கும் மின்சார வாகனங்கள்! காரணம் என்ன?

SCROLL FOR NEXT