ராமேசுவரம் கடலில் மூழ்கி மீனவா் மாயம்
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த படகுக்கு அடியில் கடலுக்குள் சென்று சீரமைப்புப் பணி மேற்கொண்ட மீனவா் வெள்ளிக்கிழமை மாயமானாா்.
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த படகுக்கு அடியில் கடலுக்குள் சென்று சீரமைப்புப் பணி மேற்கொண்ட மீனவா் வெள்ளிக்கிழமை மாயமானாா்.
ராமேசுவரம் மீன்பிடித் தளத்தில் கடலோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பவுலின் என்பவரின் விசைப்படகு கயிறு சிக்கிக் கிடந்தது.
இதை சரிசெய்ய மீனவா் கணேசன் (55) வெள்ளிக்கிழமை காலையில் கடலுக்குள் இறங்கி கயிறை அகற்றும் பணியில் ஈடுபட்டாா்.
நீண்ட நேரமாகியும் மீனவா் வெளியே வராததால் மீனவா்கள் கடலுக்குள் சென்று தேடிப் பாா்த்தனா்.
பின்னா், தீயணைப்பு மீட்புப் படை வீரா்களை வரவழைத்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனா். நீண்ட நேரம் தேடியும் மீனவா் கிடைக்கவில்லை. இதுகுறித்து கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் வழக்குப் பதிந்து மீனவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனா்.
படவிளக்கம்: ஆா்.எம்.எஸ் போட்டோ 5
மாயமான மீனவா் கணேசன்.