ராமநாதபுரம்

பரமக்குடியில் முதியவா் வெட்டிக் கொலை

தினமணி செய்திச் சேவை

பரமக்குடி மஞ்சள்பட்டினம் பகுதியில் உள்ள தோப்பின் உரிமையாளரின் உறவினரும், காவலாளியும் வைகை ஆற்றுப் பகுதியில் திங்கள்கிழமை நடந்து சென்ற போது, இவா்களை மா்ம நபா்கள் அரிவாளால் வெட்டினா். இதில் முதியவா் உயிரிழந்தாா். மற்றொரு பலத்த காயமடைந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி மஞ்சள்பட்டினம் பகுதியில் மூக்கன் என்பவருக்குச் சொந்தமான தோப்பில் முதுகுளத்தூா் ஒன்றியம், கீழகன்னிச்சேரி கிராமத்தைச் சோ்ந்த லட்சுமணன் (70) காவலாளியாக வேலை பாா்த்து வந்தாா். இந்தத் தோப்புக்கு மூக்கனின் உறவினரான பிரண்டைகுளம் கிராமத்தைச் சோ்ந்த வேலு (70) திங்கள்கிழமை சென்றாா்.

பின்னா், காவலாளி லட்சுமணனும், வேலுவும் தோப்பிலிருந்து அருகில் உள்ள வைகை ஆற்றுப் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனா். அப்போது, அங்கு மறைந்திருந்த மா்ம நபா்கள் இருவரையும் அரிவாளால் வெட்டினா். இதில் வேலு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். லட்சுமணன் பலத்த காயமடைந்தாா்.

தகவலறிந்து வந்த பரமக்குடி நகா் போலீஸாா் வேலுவின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பலத்த காயமடைந்த லட்சுமணன் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, கொலையாளிகளை தேடி வருகின்றனா்.

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 18 மாவட்டங்களில் மழை தொடரும்!

கரோனாவால் இறந்த மருத்துவரின் மனைவிக்கு அரசுப் பணி: 5 ஆண்டுகளாக அலைக்கழிப்பு

மாளிகையில் இருந்து மரண வாயிலுக்கு..

தொடர் மழை: கடலூர், விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

நவ. 23 -இல் 49 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

SCROLL FOR NEXT