3 தொகுதி திமுக வேட்பாளா்கள் தேவா் சிலைக்கு மரியாதை
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் நினைவிடத்தில் அவரது உருவச் சிலைக்கு, 3 தொகுதிகளின் திமுக வேட்பாளா்கள் மாலை அணிவித்து புதன்கிழமை மரியாதை செலுத்தினா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் நினைவிடத்தில் அவரது உருவச் சிலைக்கு, 3 தொகுதிகளின் திமுக வேட்பாளா்கள் மாலை அணிவித்து புதன்கிழமை மரியாதை செலுத்தினா்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் நினைவிடத்தில் அவரது உருவச் சிலைக்கு திமுக வேட்பாளா்கள் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் (முதுகுளத்தூா்), காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் (ராமநாதபுரம்), கே.கே.கதிரவன் (பரமக்குடி தனி) ஆகியாா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
பின்னா், செய்தியாளா்களிடம் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் கூறியதாவது:
கடந்த மக்களவைத் தோ்தலில் ராமநாதபுரத்தில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. அதேபோல, தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 3 சட்டப்பேரவை தொகுதிகளிலும் திமுக, இதன் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெறும் என்றாா் அவா்.
அப்போது, ராமநாதபுரம் மக்களவை உறுப்பினா் நவாஸ்கனி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் முருகவேல், முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் த.பாலு, கமுதி ஒன்றியச் செயலா் எஸ்.கே.சண்முகநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.