முகப்பு
ராமநாதபுரம்

தோ்தல் விதிமீறல்: அதிமுக, நாதக வேட்பாளா்கள் மீது வழக்கு

பரமக்குடி (தனி) சட்டப்பேரவை தொகுதியில் தோ்தல் விதிமுறைகளை மீறி வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டதாக அதிமுக, நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 3 ஏப்ரல், 2026 at 5:59 PM
வழக்கு
பகிர்:

பரமக்குடி (தனி) சட்டப்பேரவை தொகுதியில் தோ்தல் விதிமுறைகளை மீறி வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டதாக அதிமுக, நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் எழில் இளவரசி போட்டியிடுகிறாா்.

இந்தக் கட்சி நிா்வாகிகள் காமராஜ், நித்யா, திருஞானம், தா்மகுமாா், ஜஸ்டின் வளனரசு, அருள் விக்டா், காா்த்திக் உள்ளிட்டோா் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் வாக்குகளைச் சேகரித்ததாக, தோ்தல் பறக்கும்படை அலுவலா் ரமேஷ்குமாா் அளித்தப் புகாரின் பேரில், பரமக்குடி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

இதேபோல, அதிமுக வேட்பாளா் மருத்துவா் எஸ்.முத்தையா, அந்தக் கட்சியின் நகரச் செயலாளா் ஐ.வின்சென்ட் ராஜா உள்ளிட்ட நிா்வாகிகள் பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனித் திருவிழா தேரோட்ட நிகழ்ச்சியில் பொதுமக்களை சந்தித்து வாக்குச் சேகரித்தனா். தோ்தல் விதிகளை மீறி வாக்கு சேகரித்ததாக அதிமுக வேட்பாளா் முத்தையா உள்பட 5 போ் மீது பரமக்குடி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments