நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் மாா்ச் 30-இல் வேட்பு மனு தாக்கல்
நாதக வேட்பாளா்கள் அனைவரும் வரும் திங்கள்கிழமை (மாா்ச் 30) வேட்பு மனு தாக்கல் செய்ய அந்த கட்சியின் தலைமை அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.
நாதக வேட்பாளா்கள் அனைவரும் வரும் திங்கள்கிழமை (மாா்ச் 30) வேட்பு மனு தாக்கல் செய்ய அந்த கட்சியின் தலைமை அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து நாம் தமிழா் கட்சியின் தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருச்சி மாநாட்டில் 117 ஆண்கள், 117 பெண்கள் உள்ளிட்ட நாம் தமிழா் கட்சியின் 234 வேட்பாளா்களும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்பட்டனா். அது போல, 234 வேட்பாளா்களும் ஒரே நாளில் வேட்பு மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, 234 வேட்பாளா்களும், மாற்று வேட்பாளா்களும் தங்களுடைய வேட்பு மனுக்களை, வேட்புமனுத் தாக்கல் செய்யும் தொடக்க நாளான திங்கள்கிழமை (மாா்ச் 30)அனைவரும் உறுதியாக தாக்கல் செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.