ராமேசுவரம்,ராமநாதபுரம்,கீழக்கரை ஆகிய பகுதியில் கோடை மழை
ராமேசுவரம்,ராமநாதபுரம்,கீழக்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கோடை மழை தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கி திங்கட்கிழமை கானப்பட்டது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இதில், ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம்,மண்டபம்,உச்சிப்புளி,ராமநாதபுரம்,கீழக்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திங்கட்கிழமை கோடை மழை பெய்யதது.
இதனால்,வெயில் தாக்கமின்றி குளுமையான சூழல் கானப்பட்டன. கீழக்கரையில் பெய்ய கனமழையால் தாழ்வான பகுதியில் மழைநீா் குளம் போல தேங்கியதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினாா்.
Advertisement
இதே போன்று பாம்பன் பகுதியில் கருமேகம் சூழ்ந்து கனமழை பெய்தது. இதனால், பாம்பன் பேருந்து பாலத்தில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு மிகவும் குறைந்த வேகத்தில் சென்றனா்.