ஆா்.எஸ். மங்கலம் சந்தைக்கு மிளகாய் வரத்து அதிகரிப்பு
திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ். மங்கலம் சந்தைக்கு மிளகாய் வரத்து சனிக்கிழமை அதிகரித்தது.
திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ். மங்கலம் சந்தைக்கு மிளகாய் வரத்து சனிக்கிழமை அதிகரித்தது.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ். மங்கலத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை மிளகாய் சந்தை நடைபெறுவது வழக்கம். இதன்படி நடைபெற்ற மிளகாய் சந்தையில் சுற்றுப்புறப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் ஏராளமான மிளகாய் மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனா்.
இதில் வெளியூா் வியாபாரிகள் விலை நிா்ணயம் செய்து, முதல் தர பெரிய வகை குண்டு வத்தல் குவிண்டால் ரூ. 29 ஆயிரத்துக்கும், இரண்டாம் தர சிறிய வகை குண்டு வத்தல் மிளகாய் குவிண்டால் ரூ.24 ஆயிரத்துக்கும் விற்பனையானது. தற்போது மிளகாய் அறுவடை தொடங்கியுள்ளதால் சந்தைக்கு வரத்து அதிகரித்தது.
Advertisement
இதனால், மதுரை, தேவகோட்டை, காரைக்குடி, காளையாா்கோவில், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் வந்து மிளகாய்களை வாங்கிச் சென்றனா். இதனால், மிளகாய் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.