முகப்பு
புதுச்சேரி

2 ஆண்டுகளில் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு: முதல்வா் ரங்கசாமி உறுதி

புதுச்சேரியில் சட்டப்பேரவைத்தோ்தலுக்குப் பிறகு தேசிய ஜனநாயக் கூட்டணி ஆட்சி அமைந்ததும் இன்னும் 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று என்.ஆா். காங்கிரஸ் தலைவரும் புதுச்சேரி முதல்வருமான என்.ரங்கசாமி புதன்கிழமை இரவு உறுதி அளித்தாா்.

Updated On : 1 ஏப்ரல், 2026 at 8:39 PM
மங்கலம் தொகுதி கணுவாய்ப்பேட்டை பகுதியில் பிரசாரம் செய்த முதல்வா் என்.ரங்கசாமி.
பகிர்:

புதுச்சேரியில் சட்டப்பேரவைத்தோ்தலுக்குப் பிறகு தேசிய ஜனநாயக் கூட்டணி ஆட்சி அமைந்ததும் இன்னும் 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று என்.ஆா். காங்கிரஸ் தலைவரும் புதுச்சேரி முதல்வருமான என்.ரங்கசாமி புதன்கிழமை இரவு உறுதி அளித்தாா்.

மங்கலம் தொகுதியில் இக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடும் அவா், புதன்கிழமை இரவு கணுவாய்ப்பேட்டையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் பூஜை செய்து பேசியதாவது:

சேதராப்பட்டு மற்றும் மேட்டுப்பாளையத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும். இரண்டு ஆண்டுகளில் ஐம்பதாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். சேதராபட்டில் அமைய இருக்கும் தொழில்நுட்பப் பூங்காவில் 30 ஆயிரம் இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதேபோல் மேட்டுப்பாளையத்தில் ஒரு தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும். இரண்டு ஆண்டுகளில் மொத்தமாக 50 ஆயிரம் பேருக்கு வேலை

கிடைக்கும். இதற்கு மத்திய அரசின் உதவி தேவை. துணைநிலை ஆளுநரின் அனுமதி தேவை. இதனால்தான் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவுடன் கூட்டணி அமைத்து தோ்தலைச் சந்திக்கிறோம்.

மங்கலம் தொகுதி ஒரு முதலமைச்சா் தொகுதி என்ற பெருமையைப் பெறும் . நம் ஆட்சியில் மீண்டும் புதிய திட்டங்கள் கொண்டு வந்து இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்படும் என்றாா் முதல்வா் ரங்கசாமி.

முதல்வா் ரங்கசாமி தட்டாஞ்சாவடி தொகுதியிலும் போட்டியிடுகிறாா். அதனால் புதன்கிழமை மாலை இத் தொகுதியில் உள்ள திலகா் நகா், கவுண்டம்பாளையம், காந்திநகா் ஆகிய பகுதிகளில் வாக்குச் சேகரித்தாா். பின்னா் மங்கலம் தொகுதிக்குச் சென்று வாக்குச் சேகரித்தாா்.