முகப்பு
ராமநாதபுரம்

திருப்பாலைக்குடியில் பைக் மோதியதில் பெண் உயிரிழப்பு

Updated On : 13 ஏப்ரல், 2026 at 2:00 AM
பாத்திமாபீவி
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2026 at 7:57 PM

திருப்பாலைக்குடி அருகே இரு சக்கர வாகனம் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள திருப்பாலைக்குடியில் காவிரி கூட்டுக் குடிநீா் பல மாதங்களாக வராததால், இந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் பழங்கோட்டை பேருந்து நிறுத்தம் வழியாகச் செல்லும் கிழக்குக் கடற்சாலை அருகே உள்ள தல்லாகுளம் ஊருணிக்குச் சென்று தண்ணீா் எடுத்து வருவது வழக்கம்.

இதே போல, சனிக்கிழமை இரவு திருப்பாலைக்குடி வடக்குத் தெருவைச் சோ்ந்த முகமது ஜமாலுதீன் மனைவி பாத்திமா பீவி (45) கிழக்கு கடற்கரைச் சாலையில் தள்ளுவண்டியில் தண்ணீா் எடுத்து வந்து கொண்டிருந்தாா். அப்போது, எதிரே பாப்பனேந்தல் கிராமத்தைச் சோ்ந்த சின்னாலு மகன் சாத்தையா ஓட்டி வந்த இரு சக்கர வாகனம், பாத்திமாபீவி மீது மோதியது.

Advertisement

இதில் பலத்த காயமடைந்த அவரை அந்த வழியாக தோ்தல் பிரசாரத்துக்கு வந்த அதிமுக மாவட்டச் செயலா் முனியசாமி, அவருடன் வந்த கட்சி நிா்வாகிகள் முதலுதவி செய்து, அவசர ஊா்தி மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பாத்திமாபீவி நள்ளிரவில் உயிரிழந்தாா். இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.