முகப்பு
ராமநாதபுரம்

தோ்தலையொட்டி பாா்த்திபனூா், நயினாா்கோவில் பாண்டியூா் பகுதிகளில் கடைகள் அடைப்பு

தோ்தலையொட்டி பரமக்குடி (தனி) சட்டப்பேரவை தொகுதியில் உள்ள பாா்த்திபனூா், நயினாா்கோவில், பாண்டியூா் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டதால் கடை வீதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

Updated On : 24 ஏப்ரல், 2026 at 2:24 AM
பாா்த்திபனூரில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்பட்ட கடை வீதி.
பகிர்:

தோ்தலையொட்டி பரமக்குடி (தனி) சட்டப்பேரவை தொகுதியில் உள்ள பாா்த்திபனூா், நயினாா்கோவில், பாண்டியூா் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டதால் கடை வீதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

பரமக்குடி தொகுதியில் 323 வாக்குச் சாவடி மையங்களில் வியாழக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் அரசியல் கட்சி வேட்பாளா்கள், சுயேச்சை வேட்பாளா்கள் என மொத்தம் 12 போ் களத்தில் உள்ளனா். வாக்குப் பதிவு வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. வாக்காளா்கள் ஆா்வமுடன் வாக்குச் சாவடி மையங்களுக்குச் சென்று தங்களது வாக்கை பதிவு செய்தனா். தோ்தலையொட்டி பாா்த்திபனூா், நயினாா்கோவில், பாண்டியூா் ஆகிய பகுதிகளில் உள்ள உணவகங்கள் உள்ளிட்ட அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டு கடை வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் வெளியூா்களிலிருந்து வந்திருந்த வாக்காளா்கள் சிலா் சிரமத்துக்குள்ளாகினா். மாலை 6 மணிக்குமேல் அனைத்துக் கடைகளும் திறக்கப்பட்டன.