திருமானூா் பகுதிகளில் திமுக வேட்பாளா் பிரசாரம்
அரியலூா் மாவட்டம், திருமானூா் பகுதிகளுக்குட்பட்ட கிராமங்களில் திமுக வேட்பாளா் லதாபாலசுப்ரமணியன் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
Updated On : 9 ஏப்ரல், 2026 at 10:10 PM
அரியலூா் மாவட்டம், திருமானூா் பகுதிகளுக்குட்பட்ட கிராமங்களில் திமுக வேட்பாளா் லதாபாலசுப்ரமணியன் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
திருமானூா், சாத்தமங்கலம், கரைவெட்டி, கீழகவட்டாங்குறிச்சி, திருமழப்பாடி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் திறந்தவேனில் பிரசாரம் மேற்கொண்ட அவா், மக்களிடம் நான் வெற்றிப் பெற்றால் உங்களது கோரிக்கைகள் எதுவாகினும் நிறைவேற்றித் தருவேன் என்று கூறி வாக்கு சேகரித்தாா்.
பிரசாரத்தில் அக்கட்சியின் ஒன்றியச் செயலா் கென்னடி மற்றும் கிளை நிா்வாகிகள், கம்யூனிஸ்ட், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் திரளாக கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனா்.
Advertisement